Monday, April 22, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-ஈ

      23 April 2024      அகரமுதல



(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-இ- தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்
சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 61-80

  1. கிறித்துவ ஆலயங்களின். மூன்றாவது ஆண்டறிக்கை(1911-15), பொதுப் பதிப்பாசிரியர் : கொண்டல் சு. மகாதேவன்
  2. வடிவேலர் சதகம் – உடுமலைப்பேட்டை முத்துசாமிக் கவிராயர் (1915)
  3. பிரதாபசந்திர விலாசம் – இராமசாமிராசு, பாரிசுட்டர், பதிப்பாளர் வி. இராமசாமி சாத்திரிலு, (1877, 1915)
  4. நாத. கீத – நாமகள் சிலம்பொலி – சி.வி. சாமிநாதையர் (1916)
  5. சத்திய அரிச்சந்திரப் பா – மதுரை தல்லாகுளம் சி. முத்திருள முதலியார் – – பரிசோதித்தவர் : பிரசங்க வித்துவான் நவநீதகிருட்டிண பாரதியார் (1916)
  6. தவம் – ச. தா. மூர்த்தி முதலியார் (1917)
  7. நாநாசிவ வாதக் கட்டளை – சிரீ சேசாத்திரி சிவனார், குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார் (1917)
  8. தாயுமான சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு
  9. (இ)ரிப்பன் ஐந்தாம் வாசக புத்தகம் – தி. செல்வகேசவராய முதலியார் (1918)
  10. சித்தார்த்தன் – அ மாதவையர் (1918)
  11. மேரு மந்தர புராணம் மூலமும் உரையும் (1918)
  12. சித்தார்த்தன் – அ மாதவையர் (1948)
  13. பிரபஞ்சவிசாரம் – யாழ்ப்பாணம் குகதாசர் – சபாரத்தின முதலியார் (1919)
  14. திருக்கருவைத் தலபுராணம் – எட்டிச்சேரி ச. திருமலைவேற் பிள்ளை (1919)
  15. மேகதூதக் காரிகை மொழிபெயர்ப்பு : சுன்னாகம் அ. குமாரசுவாமிப்பிள்ளை (1919)
  16. பாண்டியதேச நாயக்கமன்னர் வரலாறு – பசுமலை நெ.இரா. சுப்பிரமணிய சருமா (1919)
  17. கலைசைச் சிலேடை வெண்பா மூலமும் உரையும் – உரை : சதாவதானம் தெ. கிருட்டிணசாமிபாவலர் (1920)
  18. பன்னிரண்டு உத்தமிகள் கதை – திவான் பகதூர் வி. கிருட்டிணமாச்சாரியார் (1920)
  19. சிறுமணிச் சுடர் – மதுரை எசு.ஏ. சோமசுந்தரம் (1920)
  20.    சீகாளத்திப் புராணம் மூலமும் உரையும் – உரை : மகாவித்துவான் காஞ்சிபுரம் இராமநந்த யோகிகள் (1920)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, April 15, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-இ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆ – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்
சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 41-60

  1. சரீர வியவட்சத சாத்திரம் என்னும் 1906
    அங்க விபாக சுகரண வாதம் – டி.ஆர். மகாதேவ பண்டிதர்
  2. சிரீ பாகவத தசமசுகந்த கீர்த்தனை 1907
    • அனந்த பாரதி சுவாமிகள்
  3. வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் 1908
    • விரிவுரை : பிறைசை அருணாசல சுவாமிகள்
    • குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார்
  4. நாட்டுப்பாட்டு (தேசியகீதம்) – – பரலி சு. நெல்லையப்பர் 1908
  5. மார்க்கண்டேய புராணம் வசன கள்வியமும்
    அரும்பத விளக்கமும் – உபகலாநிதி பெரும்புலவர் 1909
    தொழுவூர் வேலாயுத முதலியார்
  6. தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் 1909
    • தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமிராசு
  7. மார்க்கண்டேய புராணம்
    வசனகாவியமும் அரும்பத விளக்கமும் 1909
    • தொழுவூர் வேலாயுத முதலியார் (பரிசோதித்தவர் :
      மேற்படியார் மகன் : வே. திருநாகேசுவர முதலியார்)
  8. அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி)
    • கவித்தலம் துரைசாமி மூப்பனார்
  9. கொக்கோகம் – அதிவீர ராம பாண்டியன் 1910
    உரை கொற்றமங்கலம் இராமசாமிப் பிள்ளை
  10. தருக்ககெளமதி
    தஞ்சை மாநகரம் வெ.குப்புசாமிராசு
  11. வியாசப் பிரகாசிகை 1910
    பதிப்பாளர் : பி.எசு. அப்புசாமி ஐயர்
  12. நளவெண்பா மூலம் அகல 1910
    உரை : தமிழ்வாணர் மதுரகவி ம. மாணிக்கவாசகம்பிள்ளை
  13. இயலிசைப் புலவர் தாரதம்மியம் 1911
    மு. இரா. கந்தசாமிக் கவிராயர்
  14. விவேகானந்த விசயம் – மகேச குமார சர்மா 1912
  15. வியாசங்களும் உபந்நியாசங்களும் 1913
    சின்னையா செட்டியார், மகிபாலன்பட்டி
  16. மொழிநூல் – மாகறல் கார்த்திகேய முதலியார் 1913
  17. விட்ணு தல மஞ்சரி (2 பாகங்கள்) 1908– 1913
    மயிலை, கொ. பட்டாபிராம முதலியார்
  18. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் 1914
    • உரை : காஞ்சி. மகாவித்துவான் இராமசாமி நாயுடு
  19. சதகத்திரட்டு 1914
  20. சந்தியாவந்தனம் – கோ. வெங்கிடாசல ஆச்சாரியார், திருச்சி 1908

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, April 8, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – அ தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்

சொற்கள் வழங்கிய

நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 21-40

  1. தமிழ் வித்யார்த்தி விளக்கம் (முதற்பாகம்) 1894
    • புத. செய்யப்ப முதலியார் – தமிழ்ப்பண்டிதர்
  2. சிரீ பத்மநாப சுவாமி சந்திரகலாட்சை மாலை 1894
    அபிநவ காளமேகம் அநந்த கிருட்டிணையங்கார்
    (வானமாமலை மடம் ஆசுத்தான வித்துவான்)
  3. மாயாவாத சண்டமாருதம் – ஓர் இந்து 1895 மூன்றாம் நிலை புத்தகம் 1897
  4. பதப்பொருளும் வினா விடையும் – எத்திராச முதலியார்
  5. தமிழ் இலக்கணத் தெளிவு – டேவிட் சோசெப்பு, பி.ஏ.,
    (இராசமுந்திரி கல்லூரி) (நானூறு பக்கங்களுக்கு மேல்)
  6. தனிப்பாசுரத் தொகை – பரிதிமாற்கலைஞன் – 1899
  7. (வித்தியாதீபிகை என்னும்) கல்வி விளக்கம் 1899
    • மொழிபெயர்ப்பாளர்கள் : எசு.வி. கள்ளப்பிரான்பிள்ளை
      சி. அப்பாவு பிள்ளை, வி. பி. சுப்பிரமணிய முதலியார்
  8. சீனம், சீனருடைய சித்திரப்படச் சரிதைகள் 1902
  9. சைவசித்தாந்தப் பிரசங்கக் கோவை –
    சொற்பொழிவாளர் : சோ. வீரப்ப செட்டியார் 1902
  10. சிவசேத்திர யாத்திரானுகூலம் –
    சாலியமங்கலம் மு. சாம்பசிவ நாயனார் 1903
  11. குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் 1904
    வித்வான் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு
  12. விவேக இரசவீரன் கதை – பாலசுப்பிரமணியபிள்ளை 1904
  13. மகாசன மண்டலி 1904
    • டி. ஏ. சாமிநாத ஐயர் (ஆர்யா பத்திரிகை ஆசிரியர்)
  14. திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் 1904
    கோ. வடிவேலு செட்டியார், சென்னை (தெ. பொ. மீ. யின் ஆசிரியர்)
    • பெங்களுர் வல்லூர் தேவராசபிள்ளை
  15. அறநெறிச்சாரம் (முனைப்பாடியார்) 1905
    • பதிப்பாசிரியர் தி. செல்வக்கேசவ முதலியார் எம்.ஏ.
  16. திருவிளையாடல் புராண மூலமும் 1905
    • அரும்பதக் குறிப்புரையும்
  17. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் 1905
    • அரும்பதக் குறிப்புரை முத்தமிழ் இரத்தினாகரம்
    • 38.மதி. பானுகவி வல்லி, ப. தெய்வநாயக முதலியார் 1906
    • 39. சேந்தன் செந்தமிழ் – பாம்பன் குமரகுருபர சுவாமிகள்
    • 40. பகவத்கீதை வெண்பா 1906
    • வாதி கேசரி சிரீ அழகிய மணவாளசீயர்
    • பதிப்பாளர் சி.. கே. பாலசுப்பிரமணியம்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Tuesday, April 2, 2024

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 43 : பூங்கொடி தெளிதல்

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 42 : தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல் -தொடர்ச்சி)

பூங்கொடி

பூங்கொடி தெளிதல்

நல்லியற் பூங்கொடி நலங்குறைந் திருப்போள் 45
சேக்கையிற் சாய்ந்து சிந்தித் திருந்தனள்;
சிந்தனைத் திரையில் சென்றபன் னிகழ்ச்சிகள்
வந்து மறைந்தன; தந்தையின் நினைவும்
நொந்தஅவ் வுளத்தில் நுழைந்தது; ஐயகோ!
மொழிக்குறும் பகைமை முதுகிடப் பொருதனை! 50
இழுக்குறும் அடிமை இரிந்திட உழைத்தனை!
வழுக்களைந் தினத்தவர் வாழ்ந்திட மொழிந்தனை!
ஆயினும் அந்தோ அறிவிலார் கூடி,
நாயினும் கீழோர் நயவஞ் சகரால்
கொன்றனர் நின்னைக் கொடுமை! கொடுமை! 55
என்றெழும் உணர்ச்சி நெஞ்சினைக் கொன்றிடத்
துயரம் புனலாய்த் துணைவிழி வழியா
உயிரொடு வெளிவரல் ஒப்ப வழிந்தது;

பூங்கொடி தெளிதல்

 இத்துயர் கண்ட எழில்மதி முகிலுட்  
 புக்கது; பின்னர்ப் புத்தொளி வீசிச்  60
 சிரித்தது வானில்; சிந்தனை நெஞ்சினில்

விரித்துள கவலை விரைந்து கலைந்திட
அடுத்த தறிவொளி, விடுத்தனள் இடுக்கண்;
உடுக்கணம் இதனை உற்று நோக்கின;
முத்தக் கூத்தனை மூடிய கல்லறை 65
சித்தத் தெழுந்தது சிலிர்த்தனள் உடலம்;
நினைதுயர் நீங்க நெஞ்சகம் சிரித்தனள்;
முனைவொடு பணிசெய முயன்றனள் நங்கை;

பூங்கொடியின் புகழ்மணம்

நாடொறும் அறிவுரை நயந்துரைத் திருந்தனள்

 

வீடுகள் தோறும் விருந்துக் கழைத்தனர், 70
கேட்போர் பலராய்க் கிளைத்தனர் பல்கினர்,
வேட்போர் தொகையும் மிகவாய்த் திரண்டன,
ஒன்றே குலமெனும் உணர்வு விரிந்தது;
நன்றே செய்தனள் நம்முயர் தலைவி
என்றே தொழுதனர் இசைத்தனர் அவள்புகழ்; 75
உள்ளம் பொய்யா துழைப்பவர் எண்ணம்
எள்ளள வும்பிழை ஏலா தீண்டெனும்

கொள்கை நிலைத்திடச் செய்தனள் கொடியே. 78

 சேக்கை - படுக்கை, பொருதனை - போரிட்டாய், இரிந்திட - விலக, வழு - குற்றம், முகில் - மேகம்.
வேட்போர் - விரும்புவோர், கொடி - பூங்கொடி.

(தொடரும்)

கவிஞர்முடியரசன், பூங்கொடி   

Monday, April 1, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – அ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்

சொற்கள் வழங்கிய

நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன்

1.            மன்னார் கோயிற் புராணம்            1855

                ⁠மகாவித்துவான் கோவிந்தபிள்ளை

2.            அளவு நூல் (சிற்பநூல்) இரண்டாம் புத்தகம்            1857

                பூதாமசு லுண்டு,

3.            இலக்கணச் சுருக்கம் – மழவை. மகாலிங்க ஐயர்     1861

4.            சிவதருமோத்தரம் மூலமும் உரையும்       

                பூமறைஞான சம்பந்த நாயனார்

                ⁠உரை, குறிப்புரை : சாலிவாடீசுர ஓதுவா மூர்த்திகள்              

5.            இந்து கைமை புநர்விவாக தீபிகை             

                ⁠- சைதாபுரம் காசி விசுவநாத முதலியார்   

6.            மகாபாரதம், ஆதிபர்வம் 1870

                ⁠- தரங்கை மாநகரம் ந. வ. சுப்பராயலு நாயகர்         

7.            நிசுட்டாநுபூதி மூலமும் உரையும்  ஆகட்டு – 1875

                ⁠- முத்துகிருட்டிண பிரம்மம்             

8.            வில்கணீயம் – யாழ்ப்பாணத்து புலோலி  

                மகாவித்துவான் வ. கணபதிபிள்ளை          1875

9.            சிரீ சங்கரவிசயம் – தொழுவூர் வேலாயுத முதலியார்              1879

10.          சீவாத்துமா – பிரம்மோபாலி         1881

11.          சிவராத்திரி புராணம் – மூலம் – யாழ்ப்பாணத்திலிருந்த        1881

                காசி அ. வரதராச பண்டிதர்          

12.          சீவா என்றொரு மானிடன் – பொன்னீலன்               1982

13.          பிரசந்ந ராகவம் – கவித்தலம் துரைசாமி மூப்பனார் 1883

14.          கங்கா யாத்ர பிராபவம் – கவித்தலம் துரைசாமி மூப்பனார்  1887

15.          நிராகரண திமிரபானு – தி. முத்துக்குமாரபிள்ளை   1888

16.          சிரீ பக்த லீலாமிர்தம் 1888              1888

                – தஞ்சை மாநகரம் இராசாராம் கோவிந்தராவ்          

17.          சிரீபக்த லீலாமிர்தம் – குறிப்புரை : தஞ்சை மகாவித்துவான்

                மதுரை முத்துபாத்தியாயர்

                – சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு (முதல் – விடுதலைக் கவிஞர்)                 

19.          சான்றார் என்னுஞ் சொல் வழக்கின் முடிவைத்                      

                தகிக்குஞ் சண்டபானு – சண்முகக் கிராமணியார்  1891      

                ⁠(சத்திரிய வித்துவான் விவேதன சங்கத் தலைவர்)                   

20.          கந்தரலங்காரம் மூலமும் உரையும்              1892                       – பதவுரை வித்யா விநோதினி பத்ராதிபர்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, March 25, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1121-1135 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144

(கவிஞர் சுரதா கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Degree – மாத்திரை
  2. Beauty Spot – அழகின் உறைவிடம்
  3. Radio – ஒலிபரப்பி
  4. Department of Epigraphy – கல்வெட்டுப் பதிவு நிலையத்தார்
  5. Executive Officer – ஆணையாளர்
  6. சல்லரி- கஞ்சிரா
    சல்லரி என்றழைக்கப்பட்டு வந்த பழைய கைப்பறையே இன்று கஞ்சிரா என்று அழைக்கப்படுகிறது. இதை வாசித்தால் கிலுகிலுவென்னும் ஒருவித ஒலி உண்டாகும். தலைஞாயிறு இராதா கிருட்டிணையர், புதுக்கோட்டை மான்-ண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளை ஆகியோர் கஞ்சிரா வாசிப்பதில் மிகச் சிறந்தவர்கள்.

  1. இசைத்தமிழன்
    அறுபத்து மூன்று நாயன்மார்களுக்குள்ளே ஆனாய நாயனார் என்பவர் வேய்ங்குழலைக் கொண்டு வாசித்த போது சராசரங்கள் யாவும் இயக்கமற்று அவ்வினிய ஓசையென்னும் தேனையுண்டு தியங்கிய பிரமரங்கள் போல் சலனமற்று நின்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. சங்கீதத்துக் குருகாத கன்னெஞ்சமுடையான் மானிட இயல்புடையவ னல்ல னென்றும் சகல துர்க்குணங்களுக்கும் அவன் மனம் இலேசாய் இணங்குமென்று இங்கிலாண்டு தேசத்தன் காளிதாசரென்று பெயர்பெற்ற ஷேக்ஸ்பியர் என்னும் நாடகக்கவி கூறுகின்றனரென்றால் சங்கீதத்தின் பெருமையை இன்னும் என்னென்று வியப்பது.

இதழ் : சனவிநோதினி (1910)
கட்டுரையாளர் : இசைத்தமிழ்

  1. BALCONY – உயர்நிலைப்படி
    கொட்டகையை யடைந்ததும் டிக்கெட்டு விவரங்களை விசாரித்தான். இரண்டு டாலர் – அல்லது சுமார் ஏழு உரூபா – கொடுத்தால் எல்லாவற்றிலும் உயர்ந்ததான பாக்சு (Box) அல்லது பெட்டி என்ற ஆசனம் கிடைக்குமென்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். பணப்பையைத் திறந்து பார்த்தான். அதில் ஐந்து டாலர்களிருந்தன. அவன் மனம் சோக்கில் நிலைத்திருந்தபடியால் பெட்டி டிக்கட்டையே வாங்கிக்கொண்டு உள்ளே சென்று உயர்நிலைப் (Balcony) படியேறி, ஒரு பாக்ஸில் போய் உட்கார்ந்தான்.

நூல் : நாகரீகப் போர் (1925), அதிகாரம் 4 – மாயா மித்திரம், பக்கம் – 38,
நூலாசிரியர் : பாசுகர என். நாராயணய்யா, பி.ஏ., பி.எல்., எல்.டி.,

  1. இரணியப் பிண்டம் – பொற்கட்டி
    இந்தியாவில் (இ)ரிக்குவேத காலத்திலேயே (ஏறத்தாழ கி.மு. 2000) பொற்கட்டி, பணமாக உபயோகிக்கப்பட்டதாக அறிகிறோம். அது இரணியப் பிண்டம் என்றழைக்கப்பட்டது. தமிழில் அதன் நேர் பொருள் பொற்கட்டி. கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் இரணியனைப் பொன்னன் என்றே கூறுவார். ‘ஆடகப் பெயரின் அவுனர் மார்பினன்’ என வரூஉம் குமரகுருபரர் வாக்கும் (திருவாரூர் நான்மணிமாலை) ஈண்டு நினைவு கூறற்பாலது.

நூல் : பணம் (1953) பக்கம் – 15,
நூலாசிரியர் : ரெ. சேசாசலம், எம்.ஏ.,
(ம. தி. தா. இந்துக் கல்லூரி – பொருளாதார ஆசிரியர்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

நூல் நிறைவு. தொடர்ந்து

சொல் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் பட்டியலும்

சொல் வழங்கிய இதழ்களும் ஆசிரியர்களும் பட்டியலும்

இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து அவை வரும்.

Monday, March 18, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1121-1135

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1098- 1120 -தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1121-1135

(கவிஞர் சுரதா கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. ஐம்பால்
    ஐம்பால் – கூந்தல், ஐந்து வகையாக முடிக்கப்படுதலின் அப்பெயர்த் தாயிற்று.
    நூல் : பெரிய புராணவாராய்ச்சி (1924) பக்கம் : 11
    நூலாசிரியர் : வா. மகாதேவ முதலியார் (கிறித்தவ கலாசாலைத் தமிழாசிரியர்)
  2. கோளம் – தரை நூல்
    பா. வே. மாணிக்க நாயக்கர்
    நான் பா. வே. மாணிக்க நாயக்கரை அடிக்கடி பொன்மலையில் சென்று கண்டேன். மகாநாட்டிலிருந்து காட்டுப் புத்தூருக்கு வந்ததும் எனது (இ)லயன்சு குறிப்புகளைக் கொண்டு, உயிர் நூல், பூமி நூல் ஆகியவற்றை எழுதினேன். அவற்றை அடிக்கடி கொண்டு சென்று மாணிக்க நாயக்கரிடம் காட்டியதுண்டு. அவர் கலைச் சொற்களைக் கவனிப்பார் தனித்தமிழ்ச் சொற்களைப் போற்றி, இப்படி எழுதுங்கள் என்பார். பொருத்தமான புதிய சொற்களையும் சொல்லுவார். -கோளம் என்பதை ‘தரை நூல்’ என்று திருத்தினார்
    சுத்தானந்த பாரதியார்
    (நூல் : ஆத்ம சோதனை)
  3. சாமுத்திரிக நூல் – வடிவமை நூல்
    வடிவமை நூலிற் சொல்லும்
    ⁠வனப்பெலாம் அமைத்து வேதன்
    கடிமலர்ச் செங்கை வண்ணம்
    ⁠காட்டிய உருவு கொல்லோ
    !

    நூல் : நைடதம், நளன் தூதுப் படலம், பாடல் 89
    நூலாசிரியர் : அதிவீரராம பாண்டியன்
  4. Statue – உருநிலை
    குருவெனச் சென்னையிற் கூடி னானுக்கெந்
    திருநலஞ் சான்றொளிர் செய்ய மாணிக்க
    வருமணி யனையவ னாகு மில்லருக்
    குருநிலை யெடுத்தன ருவத்தி நெஞ்கமே!
  5. ஆசான் – ஆசிரியன் :
    (இங்கு டாக்டர் மில்லர் அவர்களைக் குறித்தது) உருநிலை – Statue
    நூல் : பாவலர் விருந்து

  6. புத்தி மயக்கம் – சிந்தை மருள்
  7. மோட்ச வீடு – மேலகம்
  8. ஆராதனை – வழிபாடு
  9. தேவாங்கம் – பட்டுச் சீலை
  10. சன்மார்க்கம் – நல்லாறு
  11. உன்னதம் – மேன்மை
  12. சிரக் கம்பம் – தலை நடுக்கம்
    நூல் : விசுவகர் மோபதேச வீரகண்டாமணி,
    பி. கல்யாண சுந்தராசாரி (நூலைப் பதிப்பித்தவர்)
  13. Deg – நீண்ட சமையல் பாத்திரம்
  14. Cheeks – கதுப்புகள்
  15. இராசுட்டிரம்   –   நாடு

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்